ETV Bharat / city

அரசியல் கட்சிகள் பத்திரிகையில் பரப்புரை விளம்பரங்கள் செய்ய தடை கிடையாது

author img

By

Published : Mar 2, 2022, 12:41 PM IST

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அரசியல் கட்சிகள் பத்திரிகையில் பரப்புரை விளம்பரங்களை செய்ய எந்த தடையும் கிடையாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

mhc
mhc

சென்னை: தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல் ரவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையான முறையில் நடத்தப்படுவதை உறுதி செய்யுமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் மாநில ஆணையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், அனைத்து கட்சிகளும் ஊடகங்கள், பத்திரிக்கைகள், வானொலிகள் மூலாக தேர்தல் பரப்புரை விளம்பரங்களை செய்யக்கூடாது. உரிய அனுமதி பெறவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

ஆனால், திமுக மற்றும் பாஜக கட்சிகள் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக பத்திரிக்கைகளில் விளம்பரங்கள் செய்துள்ளன. எனவே விதிகளுக்கு எதிராக செயல்பட்ட வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அதுவரை மாநகராட்சி மேயர், துணை மேயர் முடிவுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் முன்பு இன்று(மார்ச். 2) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி எந்த நடவடிக்கை எடுக்க முடியாது. பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்ய அரசியல் கட்சிகளுக்கு எந்த தடையும் கிடையாது. சட்ட நுணுக்கங்களை ஆராயமல் வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டு, வழக்கை ரத்து செய்தனர்.

இதையும் படிங்க: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற கிளை முக்கிய உத்தரவு

சென்னை: தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல் ரவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையான முறையில் நடத்தப்படுவதை உறுதி செய்யுமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் மாநில ஆணையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், அனைத்து கட்சிகளும் ஊடகங்கள், பத்திரிக்கைகள், வானொலிகள் மூலாக தேர்தல் பரப்புரை விளம்பரங்களை செய்யக்கூடாது. உரிய அனுமதி பெறவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

ஆனால், திமுக மற்றும் பாஜக கட்சிகள் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக பத்திரிக்கைகளில் விளம்பரங்கள் செய்துள்ளன. எனவே விதிகளுக்கு எதிராக செயல்பட்ட வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அதுவரை மாநகராட்சி மேயர், துணை மேயர் முடிவுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் முன்பு இன்று(மார்ச். 2) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி எந்த நடவடிக்கை எடுக்க முடியாது. பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்ய அரசியல் கட்சிகளுக்கு எந்த தடையும் கிடையாது. சட்ட நுணுக்கங்களை ஆராயமல் வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டு, வழக்கை ரத்து செய்தனர்.

இதையும் படிங்க: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற கிளை முக்கிய உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.